Saturday, October 10, 2009

புதிய சமுதாயம்

தீவிரவாதி,

எண்ணில் அடங்கா உயிர்களை
விரல் சொடுக்கும் வேளையிக்குள்
சிதற‌டிக்கும்.,
அதி பயங்கர "புற்று நோய்"!!


விண்ணை முட்டும் கட்டடங்களை
கண் இமைக்கும் பொழுதுக்குள்
தரை மட்டம் ஆக்கும்.,
அதி பயங்கர "சூறாவளி"!!

என்னை அழித்திட இயலாதெனின்
உன்னை நீயே
அழித்துக் கொள்ளும்.,
அதி பயங்கர "கோழை"!!

ஏ கோழையே....

எண்ணிலடங்கா உயிர்களிடம்,
விண்ணை முட்டும் கட்டடங்களிடம்,
ஏதுமறியா அப்பாவி மக்களிடம்,
வீரத்தைக் காட்டும் "முட்டாள்"
நீ மட்டுமல்ல?!!!

உன்னை அழிக்கிறேன் என‌
புறப்பட்டு,
உன்னைத் தவிர‌
"மற்றவைகளை" அழிக்கும்
ஒவ்வொருவனும் கூட...

எனவே,

ஒப்புக்கொள்கிறேன்
இச்சமூகத்தில் அனைவரும்
"தீவிரவாதிகள்"....என்று....
எதிர்நோக்குகிறேன்!!...
தீவிரவாதிகளற்ற..
கோழைகளற்ற...
ஒரு "புதிய சமுதாயத்தை"!!!.......

No comments: